கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக ரேமி லெம்பெர்ட் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பிரான்ஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், 2025 மார்ச் 24 அன்று காலை 0900 மணிக்கு, கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 மார்ச் 24
Please follow and like us: