இலங்கைக்கான நியூசீலாந்தின் உயர்ஸ்தானிகர் நியமனம்

இலங்கைக்கான நியூசீலாந்தின் உயர்ஸ்தானிகர் நியமனம்

கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான நியூசீலாந்தின் உயர்ஸ்தானிகராக, திரு டேவிட் கிரகரி பைன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், நியூசீலாந்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில், 2024, ஜூன் 05 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஜூன் 05

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close