
கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் விசேடமானதும் முழுமையான அங்கீகாரமும் பெற்ற முதலாவது வதிவிடத் தூதுவராக மேதகு சர்ஜி விக்டோரோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், கசகஸ்தான் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2025, ஜூலை 24 ஆம் திகதி மு.ப.9.30 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஜூலை 24



Please follow and like us:


