இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவாலுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த  மொரகொட  சந்திப்பு

 இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவாலுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த  மொரகொட  சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ  அஜித் குமார் தோவாலை இன்று (08) புதுடெல்லியில் உள்ள அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

உயர்ஸ்தானிகர் மொரகொடவுக்கு அன்பான வரவேற்பை அளித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல், அவருடன் மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும்  இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர் இரு நாடுகளினதும் பரஸ்பர மூலோபாய நலன்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

'இந்தியாவிலுள்ள இலங்கையின் இராஜதந்திரத் தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த நாட்டு வியூகம் 2021/2023'  என்ற தனது கொள்கை வரைபடத்தின் பிரதியை திரு. தோவாலுக்கு உயர்ஸ்தானிகர் மொரகொட வழங்கினார்.

அஜித் குமார் தோவால் இந்தியாவின் ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார். அவர் அமைச்சரவை  அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியொன்றையும் வகிக்கின்றார்.

 இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

புதுடில்லி

2021 அக்டோபர் 12

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close