ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின், 2025 ஆகஸ்ட் 6 முதல் 10 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, ஆளுநர் நாயகம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரும், கலாநிதியுமான ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் ஆஸ்திரேலியாவால் ஆதரிக்கப்படும் பல திட்டங்களையும் ஆளுநர் நாயகம் பார்வையிடவுள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதையும் இவ்விஜயம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஆகஸ்ட் 05
Please follow and like us:


