ஆட்கடத்தலுக்கு ஆளாக வேண்டாம் என இலங்கையர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

ஆட்கடத்தலுக்கு ஆளாக வேண்டாம் என இலங்கையர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

இலங்கையின் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக இலங்கையர்ளிடமிருந்து பல எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் தூதரகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. தொழில்வாய்ப்புகளைத் தேடுவதற்கும், ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்குமாக மாணவர் / வருகைதரு வீசாக்களில் ரஷ்யக் கூட்டமைப்பிற்கு பயணிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, ரஷ்ய அதிகாரிகள் 27 இலங்கையர்களைக் கைது செய்ததுடன், அவர்களில் 17 பேர் சிறைத்தண்டனையை நிறைவு செய்ததன் பின்னர் ஏற்கனவே இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். தமது சட்ட செயன்முறை தொடர்வதன் காரணமாக, ரஷ்யக் கூட்டமைப்பின் பல்வேறு நகரங்களில் இன்னும் பத்து பேர் தடுப்பு முகாம்களில் உள்ளனர்.

இலங்கையின் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள், ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வேறு சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இந்த சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. பெரும்பாலும், மாணவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, அதிக சம்பளத்திற்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எல்லைகளைக் கடக்க வசதிகளை வழங்குதல் போன்ற தவறான வாக்குறுதிகளுடன் மாணவர் / வருகைதரு வீசாக்களில் அனுப்பப்படுகின்றார்கள். மேலும், ரஷ்யாவுக்கான பயணத்திற்காக முகவர்களால் மாணவர்களிடமிருந்து கணிசமான அளவு பணம் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. பின்னர், மாநில எல்லைகள் வழியாக பெலாரஸ், உக்ரைன் போன்ற நாடுகளுக்கும், ஐரோப்பாவிற்கும் மாறுவேடத்தில் ஆட்கடத்தல் முறைமையில் கொண்டு செல்வதற்கான சட்டவிரோத முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சந்தேகத்திற்கு இடமில்லாத மாணவர்களை சுரண்டுவதனையும், முறையான சட்ட முறைமைகளைப் புறக்கணித்து பணத்தைப் பெறுவதனையும் குறிக்கோள்களாகக் கொண்ட மோசடி முகவர்களிடம் பல இலங்கை மாணவர்கள் சிக்கியுள்ளனர். ரஷ்யாவையோ அல்லது வேறு எந்த அண்டை நாடுகளையோ அடைவதற்கு இதுபோன்ற சட்டவிரோத வழிமுறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள இலங்கைத தூதரகம் இலங்கையர்களை கண்டிப்பாக அறிவுறுத்துகின்றது.

குடிவரவு விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, வருகைதரு வீசாக்களில் ரஷ்யக் கூட்டமைப்பிற்கு பயணிக்கும் வெளிநாட்டவர்கள் தமது வீசாக்கள் செல்லுபடியாகும் காலத்தில் தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதுடன், தண்டனைக்கும உட்படுத்தப்படுவார்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாகக் குடியிடிருத்தல், காலாவதியான வீசாக்கள் மற்றும் குடிவரவு விதிமுறைகளை மீறுதல், போலியான மாணவர் / தொழில்வாய்ப்பு வீசாக்களை வைத்திருத்தல், மாநில எல்லைகளை சட்டவிரோதமாகக் கடத்தல் உள்ளிட்ட பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இலங்கையர்களுக்கு ஏராளமான தண்டனைகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளால் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, ஆட்கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் குறித்த விவரங்களை ரஷ்யக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை அரசாங்கங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதற்கு ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தூதரகம் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

எனவே, போலியான முகவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், எந்தவொரு சட்டவிரோத அமைப்புக்களுக்கும் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும், ஆட்கடத்தலுக்குப் பலியாகாமல் இருக்குமாறும் கடுமையாக அறிவுறுத்தப்படுகின்றது. மேலும், தொழில் வாய்ப்புக்களைத் தேடும் அல்லது ஐரோப்பாவைக் கடக்கும் நோக்கத்துடன் மாணவர் / வருகைதரு வீசாக்களில் ரஷ்யக் கூட்டமைப்புக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தூதரகம்,

மொஸ்கோ

 

20 நவம்பர் 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close