அன்டோராவின் இணை இளவரசர் மாண்புமிகு ஜோன் என்ரிக் விவ்ஸ் ஐ சிசிலியாவிடம் தூதுவர் பேராசிரியர் க்ஷானிகா ஹிரிம்புரேகம நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

அன்டோராவின் இணை இளவரசர் மாண்புமிகு ஜோன் என்ரிக் விவ்ஸ் ஐ சிசிலியாவிடம் தூதுவர் பேராசிரியர் க்ஷானிகா ஹிரிம்புரேகம நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

அன்டோரா மற்றும் ஸ்பெயின் எல்லையில் அமைந்துள்ள பிஷப்பின் உத்தியோகபூர்வ இல்லமான எபிஸ்கோபல் பேலஸ்-லா சியு                   டி உர்கெல்லில் (அரண்மனை டு பதி பலாவ், 1-3) 2021 நவம்பர் 05ஆந் திகதி நடைபெற்ற விழாவில், அன்டோராவின் இணை இளவரசர் மாண்புமிகு  ஜோன்-என்ரிக் விவ்ஸ் ஐ சிசிலியாவிடம் தூதுவர் பேராசிரியர் க்ஷானிகா ஹிரிம்புரேகம தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார்.

தனது நற்சான்றிதழ்களைக் கையளித்து, இணை இளவரசருக்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் பேராசிரியர் க்ஷானிகா ஹிரிம்புரேகம, அன்டோராவிற்கும் இலங்கைக்கும் இடையில்  குறிப்பாக முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

இதற்கு பதிலளித்த இணை இளவரசர், பொருளாதார அபிவிருத்தியில் சுற்றுலா கணிசமான பங்கை வகிக்கும் சிறிய நாடுகளாக அன்டோராவும் இலங்கையும் அதிக தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன எனத் தெரிவித்தார்.  அவர் உலகப்  புகழ்பெற்ற இலங்கையின் தேயிலை மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையில், குறிப்பாக சுற்றுலா, வர்த்தகம், நிதி ஆகிய துறைகளில் அன்டோராவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.

அன்டோரா தலைவர் மற்றும் யுனெஸ்கோவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஆகியோருக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரமளிக்கப்பட்ட பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் ஹிரிம்புரேகம இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தூதரகம்,

பிரான்ஸ்

2021 நவம்பர் 09

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close