அத்தியாவசிய மருந்துப்பொருட்களை ஜோர்தான் இலங்கைக்கு நன்கொடை

அத்தியாவசிய மருந்துப்பொருட்களை ஜோர்தான் இலங்கைக்கு நன்கொடை

இலங்கை சுகாதார அமைச்சின் வேண்டுகோளின் பேரில் ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக ஏற்பாடு செய்தது.

ஜூலை 19ஆந் திகதி அனுப்பப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் தூதரகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் சாத்தியமானதுடன், இந்த உன்னத முயற்சிக்கு உதவுவதற்காக ஜோர்தான் முழுவதும் உள்ள பல ஆடைத் தொழிற்சாலைகளை அணுகியது.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மேற்கொள்ளப்பட்ட முந்தைய நான்கு நன்கொடைகளுடன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது நன்கொடை இதுவாகும்.

 

இலங்கைத் தூதரகம்,

ஜோர்தான்

 

2022 ஜூலை 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close