மலேசியாவின் ஜோகூரில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை இலங்கையின்  உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுப்பு

 மலேசியாவின் ஜோகூரில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை இலங்கையின்  உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுப்பு

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2021 டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய  திகதிகளில் மலேசியாவின் ஜோகூரில் ஐந்து வௌ;வேறு இடங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை நடாத்தியது.

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பெரும்பான்மையான இலங்கைப் பிரஜைகள் பணிபுரிகின்றனர். மலேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு 2021 டிசம்பர் 31ஆந் திகதியுடன்  முடிவடைந்த நிலையில், மேலதிகமாகத் தங்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு மீளத் திரும்புவதற்கு இயந்திரத்தால் படிக்க முடியாத கடவுச்சீட்டுகள் அவசரமாகத் தேவைப்பட்டன. பொது மன்னிப்புக் காலம் நிறைவடைவதற்குள் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தமது வீசா அந்தஸ்தை முறைப்படுத்தத் தவறினால், அவர்கள் தானாகவே நாட்டின் குடிவரவுச் சட்டங்களை மீறியவர்களின் பட்டியலுக்குள் வரும் அதே வேளை, அவர்கள் கைது, நீதித்துறை செயன்முறை மற்றும் அடுத்தடுத்த நாடுகடத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக கடுமையான இயக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் இருந்த மலேசியா, சமீபத்தில் இயக்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கிய போதிலும், ஜோகூரில்  உள்ள பெரும்பாலான நிறுவனங்கள், மாநிலத்திற்கு வெளியே கோலாலம்பூருக்குச் சென்றால், பொதுமக்களைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் திரும்பும்போது அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தன. எனவே, புலம்பெயர் தொழிலாளர்கள் சான்சரி வளாகத்தில் கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அசௌகரியங்களைப் போக்குவதற்காக, உயர்ஸ்தானிகராலயம் ஜோகூர் மாநிலத்தில் ஐந்து வௌ;வேறு இடங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை நடாத்தியதுடன், இந்த தொழிலாளர்கள் மலேசியாவில் சுகாதார வழிகாட்டுதல்கள் அல்லது தொற்றுநோய் கட்டுப்பாடுகளை மீறாமல் கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்கு இது உதவியது.

நடமாடும் கொன்சியூலர் சேவைகளால் சுமார் 300 இலங்கையர்கள் பயனடைந்தனர். நடைமுறை  மற்றும் தனிப்பட்ட விடயங்களில் ஆலோசனைகளைப் பெறுவதற்காக இன்னும் பலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். மேலும், பல இலங்கையர்கள் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுகளை புதுப்பிப்பதற்கும், ஆவணங்களை அங்கீகரிப்பதற்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டனர்.

இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் பல நிறுவனங்களின் மனிதவளத் திணைக்களப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன், இலங்கையின்  புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல பணியிடப் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்க்க முடிந்தது. மேலும், ஜோகூரைத் தளமாகக் கொண்ட தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் 2022 இல் இலங்கையர்களுக்கு குறிப்பாக ஆடை மற்றும் ஆடைத் துறையில் அதிக வேலை வாய்ப்புக்களை ஒதுக்குவது குறித்து உறுதிமொழியைப் பெற முடிந்தது.

இலங்கைத் தொழிலாளர்கள் உள்ளூர் வைத்தியர்களின் சேவையைப் பெறும்போது மொழித் தடைகளை எதிர்கொள்வதால், பலர் முறையான சிகிச்சையின்றி பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக, தூதரகத்தின் நடமாடும் கொன்சியூலர் சேவைகளுடன்  இணைந்து மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்தது. மலேசியாவில் பணிபுரியும் இலங்கை மருத்துவர் ஒருவர் இந்த முயற்சியில் தூதரகத்துடன் இணைந்து தனது சேவையை வழங்கினார். மருத்துவ முகாம் மாபெரும் வெற்றியடைந்ததுடன், ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டதால், இந்த வசதிக்காக பலர் நன்றிகளைத் தெரிவித்தனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

கோலாலம்பூர்

2021 டிசம்பர் 20

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close