சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கேரள முதல்வர் மற்றும் ஆளுநருடன் சந்திப்பு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கேரள முதல்வர் மற்றும் ஆளுநருடன் சந்திப்பு

 சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள ஆளுநர் ஆரிப் முஹமத் கானை 2022 ஜூன் 30 ஆந் திகதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் சந்தித்தார்.

கேரள சட்டப் பேரவைக் கட்டிடத்தில் நடைபெற்ற முதலமைச்சருடனான சந்திப்பில், இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடையிலான வரலாற்றுப் பண்பாட்டுப் பிணைப்பு மற்றும் உயிரியல் புவியியல் ஒற்றுமையை எடுத்துரைத்த பிரதி உயர்ஸ்தானிகர், இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளைப் பாராட்டினார். இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியாவின் ஆதரவை பிரதி உயர்ஸ்தானிகர் கோரியதுடன், இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு முதலமைச்சர் ஒப்புக்கொண்டார்.

திருவனந்தபுரம் ராஜ்பவனில் ஆளுநருடனான சந்திப்பு நடைபெற்றது. கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருப்பதால், கேரளா மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் சாத்தியமான கல்வி, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ஒத்துழைப்புகள் மற்றும் கேரளப் பல்கலைக்கழகங்களில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2022 ஜூலை  08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close