சீஷெல்ஸ் குடியரசில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு வரவேற்பு

சீஷெல்ஸ் குடியரசில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு வரவேற்பு

சீஷெல்ஸ் குடியரசிற்கு பயணித்த UL 707ஐ இலக்கமுடைய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தை சீஷெல்ஸ் குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஸ்ரீமால் விக்கிரமசிங்க 2021 டிசம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை வரவேற்றார்.

இலங்கையை கொழும்பு வழியாக உலகளாவிய பாதை வலையமைப்புடன் இணைக்கும் வகையில், 21 மாதங்களுக்குப் பின்னர் சீஷெல்ஸுக்கான விமானங்களை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மீண்டும் தொடங்கியுள்ளது. 2020 மார்ச் 16ஆந் திகதி சீஷெல்ஸிற்கான தனது சேவையை இலங்கை நிறுத்தியிருந்ததுடன், தற்போது வாரத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விமானங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலான சீஷெல்ஸ் நாட்டவர்கள் இலங்கையின் நிபுணத்துவ மருத்துவ வசதிகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்வதாக அறியப்படுகின்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

விக்டோரியா

2021 டிசம்பர் 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close