இலங்கையின் புதிய துணைத் தூதுவர் ஜித்தாவில் கடமைகளைப் பொறுப்பேற்பு

 இலங்கையின் புதிய துணைத் தூதுவர் ஜித்தாவில் கடமைகளைப் பொறுப்பேற்பு

சவூதி அரேபிய இராச்சியத்தின் ஜித்தாவிற்கான இலங்கையின் நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர் எஸ்.எம். ஃபலாஹ் அல்ஹப்ஷி மௌலானா, 2022 மார்ச் 01ஆந் திகதி ஜித்தாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தின் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எளிமையான விழாவில்  தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பதவியை ஏற்றுக்கொண்டவுடன், நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர் மற்றும் அவரது மனைவியை ஆலோசகர் டி.எஃப்.எம். ஆஷிக் வரவேற்றார்.

துணைத் தூதுவர் தனது அலுவலகத்தில் பாரம்பரிய மங்கள விளக்கை ஏற்றியதைத் தொடர்ந்து கடமைகளைப் பொறுப்பேற்றார். ஊழியர்களிடம் உரையாற்றிய துணைத் தூதுவர், சுற்றுலா, வர்த்தகம், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புக்களை மேம்படுத்துவதில் தனது இலக்குகளை வகுத்தார்.

அவரது தற்போதைய பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அவர் முக்கிய நிறுவனங்களில் பல பதவிகளில் பணியாற்றினார்.

 

இலங்கையின் துணைத் தூதரகம்,

ஜித்தா

2022 மார்ச் 11

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close