இலங்கைக்கான ஆஜன்டீனக் குடியரசிற்கானத் தூதுவர் நியமனம்

 இலங்கைக்கான ஆஜன்டீனக் குடியரசிற்கானத் தூதுவர் நியமனம்

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான ஆஜன்டீனக் குடியரசிற்கான விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவருமாக மேதகு மெரியானோ ஒகஸ்டின் கொச்சீனோ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், ஆஜன்டீனக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம்,  2025, மே 15 அன்று முற்பகல் 09.00 மணிக்கு, கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 2025 மே 15

 

Please follow and like us:

Close