Foreign Minister attends  the Republic Day  Reception of India as Chief Guest

Foreign Minister attends  the Republic Day  Reception of India as Chief Guest

His Excellency DR.Subrahmanyam Jaishankar
Minister of External Affairs of the Republic India

 

Excellency,

 

It is with great pleasure that I convey to you, sincere greetings and warm felicitations on the auspicious occasion of the Republic Day of India.

 

Our two countries are bound by historical, traditional and cultural bonds that have been nurtured over millennia.

 

Bilateral relations between Sri Lanka and India continue to be strengthened and diversified through our interactions at bilateral and multilateral fora, which is a manifestation of the consolidation of these time –tested bonds.

 

Please accept, Excellency, the assurances of my highest consideration, and my personal good wishes for your continued good health and happiness as well as for continued peace and prosperity of the friendly people of India.

 

Remarks made by Hon. Dinesh Gunawarden can be downloaded via: http://www.mfa.gov.lk/wp-content/uploads/2020/01/Remarks-made-by-Hon.-Dinesh-Gunawarden.pdf

IMG_0937 IMG_1024 (3) IMG_1038 IMG_1095 (1)

-------------------------------------

2020 ජනවාරි 26 වැනි දින පැවති, ඉන්දියාවේ 71 වැනි ජනරජ දින සැමරුමි උත්සවයේදී විදේශ සබදතා අමාත්‍ය ගරු.දිනේෂ් ගුණවර්ධන මහතා විසින් සව්දිය පුරමින් කරන ලද ප්‍රකාශය 

ශ්‍රී ලංකාව සදහා ඉන්දියානු මහ කොමසාරිස් තරංජිත් සිං සන්ධු මැතිතුමනි,

ගරු අමාත්‍යවරුනි,

තානාපතිවරුනි,

නෝනාවරුනි, මහත්වරුනි,

 

ඉන්දියාවේ ජනරජ දිනය සමරන මෙම අවස්ථාවේදී, ශ්‍රී ලංකාවේ අතිගරු ජනාධිපති, ශ්‍රී ලංකා රජය සහ එහි ජනතාව නියෝජනය කිරීමට ලැබීම මහත් භාග්‍යයක් කොට සලකමි.

තානාපතිවරුනි, නෝනාවරුනි, මහත්වරුනි,

ශ්‍රී ලංකාව සහ ඉන්දියාව, ඉතිහාසය,සංස්කෘතිය සහ ආගම සමඟ සමීපව බැඳී ඇති හා සහස්‍ර ගණනාවක් පුරා ඉපැරණි සබඳතා භුක්ති විඳිති. ඉන්දියාව ශ්‍රී ලංකාවේ ආසන්නතම අසල්වැසියා වන අතර දෙරට අතර ඇති මෙම ආසන්නතාවය එකිනෙකාගේ සංස්කෘතීන් හා සමාජ සාරධර්ම පෝෂණය කළ ශිෂ්ටාචාර‍ාත්මක උරුමයන් හුවමාරු කර ගැනීමට දායක විය. පුරාණ හින්දු හා බුද්ධාගමේ දර්ශනවාදයන් තුළින් දෙරට අතර සමීප සබදතා ඇති කර තිබෙන අතර ඒවා අපගේ පාලන කටයුතුවලට ශක්තිමත් පදනමක් ලෙස පවතී.

ඉන්දියාවේ විදේශ සම්බන්ධතාවලදී ශ්‍රී ලංකාවට සෑම විටම විශේෂ ස්ථානයක් හිමි විය. මිථ්‍යා පුරාවෘත්තවලින් ආරම්භ වී, තුන්වන සියවස දක්වා වූ අතීතයකදී, මෞර්ය අධිරාජ්‍ය සමයේ දී මෙන්, අශෝක අධිරාජ්‍යයා, බුදුන්ගේ සාමය පිළිබඳ පණිවුඩය බෙදා හදා ගැනීම සඳහා තම පවුල ආගමික දූතයින් ලෙස ශ්‍රී ලංකාවට යැවීමට පෞද්ගලික උනන්දුවක් දැක්වීය. කාලයාගේ ඇවෑමෙන්, දෙරට අතර අන්තර් ක්‍රියාකාරිත්වය, ශ්‍රී ලංකාවේ උරුමය හා සංස්කෘතිය හැඩගැස්වීමේදී කැපී පෙනුන අතර අපගේ ජාතින්ගේ අනන්‍යතාවය ගොඩනැගීමට දායක විය

පශ්චාත් යටත් විජිත සමයේදී, මහත්මා ගාන්ධි, ශ්‍රී ජවහල්ලාර් නේරු වැනි ශ්‍රේෂ්ඨ නායකයින් විසින් අපගේ ජාතිය හැඩගස්වා තිබෙන අතර රබීන්ද්‍රනාත් තාගෝර්ගේ සංස්කෘතික ප්‍රතිමූර්තිය මඟින් අප කලාපයේ පුරාණ සාරධර්ම හා ප්‍රඥාව නැවත ලබාගැනීමේ යුගයක් කරා ගෙන ආහ. 1948 දී විධිමත් රාජ්‍යතාන්ත්‍රික සබඳතා ඇති කිරීමත් සමඟ අපේ දෙරට බ්‍රිතාන්‍ය පාලනයේ අලුතින් ස්වාධීන වූ රටවල් ලෙස ශක්තිමත් ද්විපාර්ශ්වික හවුල්කාරිත්වයක් ඇති කර ගත්හ. එතැන් පටන් අපගේ සබඳතා, ප්‍රජාතන්ත්‍රවාදයේ හා නිදහසේ මූලධර්ම මගින් බැඳී ඇති විවිධ ක්ෂේත්‍රයන් ආවරණය කරමින් බොහෝ ආකාරවලින් තවදුරටත් වර්ධනය විය.

තානාපතිවරුනි, නෝනාවරුනි, මහත්වරුනි,

අප 21 වන සියවසේ දෙවන දශකය තුළට පිවිසෙන්නේ අන්‍යෝන්‍ය ගෞරවය සහ අපේ ජනතාවගේ සමෘද්ධිය සඳහා වූ කැපවීම් සමඟ අපගේ සබදතා නැවත අර්ථකථනය කරනු ලබන අවධියකදීය. 2019 නොවැම්බරයේ දී, ශ්‍රී ලංකාවේ ජනාධිපතිවරණයෙන් ඉක්බිතිව, ඉන්දීය විදේශ කටයුතු අමාත්‍ය ආචාර්ය ජයශංකර් මැතිතුමා ශ්‍රී ලංකාවට පැමිණි අතර, අලුතින් තේරී පත් වූ ජනාධිපතිවරයා සුහදශීලි කථාබහක නිරත වූ පළමු විදේශීය සම්භාවනීය පුද්ගලයා ඔහු විය.

ඇත්ත වශයෙන්ම, ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා සිය ධුරයට පත්වීමෙන් පසු නිරත වූ සිය පළමු විදෙස් සංචාරය ඉන්දියානු සංචාරය වන අතර අග්‍රාමාත්‍ය නරේන්ද්‍ර මෝදි සහ අනෙකුත් ඉන්දීය නායකයින් සමඟ ඉතා ඵලදායී සාකච්ඡා පැවැත්වීය. සති කිහිපයකට පෙර විදේශ කටයුතු අමාත්‍යවරයා ලෙස මගේ පළමු නිල විදේශ සංචාරය ඉන්දියාවේ නියැලීමට අවස්ථාව ලැබුණු අතර ඉන්දීය ජාතික ආරක්ෂක උපදේශක අජිත් ඩෝවාල් මහතා පසුගිය සතියේ ශ්‍රී ලංකාවට පැමිණියේය. ගරු. අගමැති මහින්ද රාජපක්ෂ මහතා ඉදිරි සති කිහිපය තුළ ඉන්දියාවේ නිල සංචාරයක් කිරීමට නියමිතය. මෙම ඉහළ මට්ටමේ ද්විපාර්ශ්වික හුවමාරු තුලින් අපගේ අන්‍යෝන්‍ය සම්බන්ධතාවලසුවිශේෂත්වය හා ශක්තිය සලකුණු කරයි. ආසියානු පුනර්ජීවනයේ  ඉදිරි දශක කිහිපය තුළ අපගේ ආර්ථිකයන් ඉදිරියට ගෙන යාමට අසල්වැසියන් හා ජාතීන් වශයෙන් අපි සූදානම්ව සිටිමු. පොදු සමෘද්ධිය ළඟා කර ගැනීම මල් ඵල ගැන්වීම සඳහා පුළුල් කාර්ය න්‍යාය පත්‍රයක් අප ඉදිරියේ තිබේ.

තානාපතිවරුනි, නෝනාවරුනි, මහත්වරුනි,

ගෝලීය ආර්ථික දැවැන්තයෙකු ලෙස ඉහළ යන ඉන්දියාවේ ආර්ථික සාර්ථකත්වයන්ගෙන් ශ්‍රී ලංකාව වැනි ආර්ථිකයන්ට ඉමහත් ප්‍රතිලාභ අත්කර ගත හැකිය. 2050 වන විට ඉන්දියාව දෙවන විශාලතම ගෝලීය ආර්ථිකය වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. ගුවන් සම්බන්ධකතාවය, ආරක්ෂක සහයෝගීතාව, වැඩිදියුණු කළ ආයෝජන, පුද්ගලාන්තර සම්බන්ධතා සහ සංස්කෘතික හුවමාරුව වැඩිදියුණු කිරීම තුළින් ශ්‍රී ලංකාවේ අපි ඉන්දියාව සමඟ ශක්තිමත් හවුල්කාරිත්වයක් ඇති කර ගැනීමට බලාපොරොත්තු වෙමු.

මෙම සන්දර්භය තුළ, ශ්‍රී ලංකාවේ තුන්වන ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ ලෙස උතුරු පළාතේ පලාලි ගුවන්තොටුපළ සංවර්ධනය කිරීම සඳහා ඉන්දීය රජය දක්වන සහාය අපි අගය කරමු. වසර 40 කට පසු චෙන්නායි-යාපනය ගුවන් ගමන් ආරම්භ කර ඇති අතර බැංගලෝරය, කොචින්, මුම්බායි සහ හයිද්‍රාබාද් නගර සම්බන්ධ කරමින් ගුවන් සේවා දීර්ඝ කිරීමට සැලසුම් කර ඇත. මීට අමතරව, ශ්‍රී ලංකා ගුවන් සේවය මේ වන විට ඉන්දියාවේ නගර 14 ක් ආවරණය කරයි. පසුගිය වසරේදී 355,000 ක් වූ ඉන්දියාවෙන් පැමිණි සංචාරකයින් සංඛ්‍යාව ශ්‍රී ලංකාවට එක්රටකින් පැමිණි වැඩිම සංචාරක සංඛ්‍යාව විය.

තානාපතිවරුනි, නෝනාවරුනි, මහත්වරුනි,

ආරක්ෂක, සමුද්‍රීය ආරක්ෂාව මෙන්ම ජාතික ආරක්ෂාව යන ක්‍ෂේත්‍රයන්හි දෙරට අතර සමීප හා උපායමාර්ගික සහයෝගීතාවයක් ඇත. ගාලු සංවාදය, ශ්‍රී ලංකා - ඉන්දියානු ආරක්ෂක සංවාදය සහ ත්‍රෛපාර්ශ්වික සමුද්‍රීය ආරක්ෂක යාන්ත්‍රණ ඇතුළු වාර්ෂික ආරක්ෂක සංවාද දෙරටටම ඔවුන්ගේ ආරක්ෂක අවශ්‍යතා සමිබන්ධයෙන් කටයුතු කිරීමේදී ප්‍රයෝජනවත් වී තිබේ. ත්‍රස්තවාදයේ හා අන්තවාදයේ හිස ඵසවීම සම්බන්ධයෙන් කටයුතු කිරීමේදී  බුද්ධි තොරතුරු හුවමාරු කර ගැනීම පිළිබඳව ඉන්දීය රජයට අපි කෘතඥ වෙමු. නව ශ්‍රී ලංකා නායකත්වය යටතේ, සහයෝගීතාව තුළින් කලාපයේ තිරසාර සාමය සහ ආරක්ෂාව සඳහා ඉන්දියාව සමඟ සහයෝගයෙන් කටයුතු කිරීමට අපි බලාපොරොත්තු වෙමු.

තානාපතිවරුනි, නෝනාවරුනි, මහත්වරුනි,

ඉන්දියාව ශ්‍රී ලංකාවේ විශාලතම වෙළඳ හවුල්කරුවා, 3 වන විශාලතම අපනයන ගමනාන්තය සහ විශාලතම ආනයන මූලාශ්‍ර ගමනාන්තය වෙයි . 2018/19 දී ඉන්දියාව සහ ශ්‍රී ලංකාව අතර සමස්ත ද්විපාර්ශ්වික වෙළඳාම ඇමරිකානු ඩොලර් බිලියන 6.2 ක් වූ අතර එය 2017/18 හා සසඳන විට 18% කට වඩා වැඩි වීමකි.

ඉන්දියාව ද ශ්‍රී ලංකාවේ ප්‍රධාන සංවර්ධන හවුල්කරුවෙකි. ඇමරිකානු ඩොලර් බිලියන 2.5 ඉක්මවූ ණය, ප්‍රදාන, ණය පහසුකම් සහ තාක්ෂණික ආධාර වශයෙන් ඉන්දියාව අඛණ්ඩව ලබා දෙන ආධාර අපි අගය කරමු.

ඉන්දීය රජයේ ආධාර ලබන නිවාස ව්‍යාපෘතිය  අපි අගය කරන අතර නිවාස 60,000 න් නිවාස 47,000 ක් මේ වන විට නිම කර ඇත. එය ඉන්දියානු රජය විසින් විදේශයන්හි සිදු කරන ලද විශාලතම ව්‍යාපෘති අතුරින් එක් ව්‍යාපෘතියකි.

තානාපතිවරුනි, නෝනාවරුනි, මහත්වරුනි,

අවසාන වශයෙන්, අපගේ දෙරට අතර ද්විපාර්ශ්වික සබඳතා වැඩිදියුණු කිරීම සඳහා ඉටු කරන විශිෂ්ට සේවය සහ කැපවීම වෙනුවෙන් තරංජිත් සිං සන්ධු මැතිතුමාට මාගේ අවංක ප්‍රශංසාව පුදකරමි. නව වගකීම් භාර ගැනීම සඳහා ඔබ අප රටින් කෙටි කලකින්  නික්ම යන බැවින් මගේ රජය වෙනුවෙන් සහ මා වෙනුවෙන් මම ඔබට සෑම සාර්ථකත්වයක්ම ප්‍රාර්ථනා කරමි. එසේම, අඛණ්ඩව සහයෝගය හා සහ‍ාය දැක්වීම වෙනුවෙන් ශ්‍රී ලංකාවේ ඉන්දීය මහ කොමසාරිස් කාර්යාලයේ කාර්යය මණ්ඩලයට ස්තූති කිරීමට මම මෙය අවස්ථාවක් කර ගනිමි.

තානාපතිවරුනි, නෝනාවරුනි, මහත්වරුනි,

- ඉන්දියා ජනරජයේ ජනාධිපති අතිගරු ශ්‍රී රාම්නාත් ගෝවින්ද් මැතිතුමාට,

- ඉන්දියා ජනරජයේ අග්‍රාමාත්‍ය අතිගරු ශ්‍රී නරේන්ද්‍ර මෝදි මැතිතුමාට,

- ඉන්දියා ජනරජයේ ජනතාවට,

සහ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදි ජනරජය සහ ඉන්දියා ජනරජය අතර කල්පවත්නා මිත්‍රත්වයට සව්දිය පිරීමට මෙම ප්‍රීතිමත් අවස්ථාවේ මා හා එක්වන්න.

ස්තූතියි

-------------------------------------

2020 ஜனவரி 26 ஆந் திகதி நடைபெற்ற 71வது இந்தியக் குடியரசு தின நிகழ்வில் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் கருத்துக்கள்

 

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மாண்புமிகு தரஞ்சித் சிங் சந்து அவர்களே,

கௌரவ அமைச்சர்களே,

மேன்மை தங்கியவர்களே,

கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

இந்தியக் குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில், அதிமேதகு ஜனாதிபதி,  இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒன்றிணைந்த இலங்கையும் இந்தியாவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த உறவுகளை அனுபவித்து வருகின்றன. இந்தியா இலங்கையின் மிக நெருங்கிய அண்டை நாடாவதுடன், ஒருவருக்கொருவர் கலாச்சாரங்களையும் சமூக விழுமியங்களையும் வளர்த்துக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நெருக்கம் நாகரிகப் பாரம்பரியத்தை பரிமாறிக் கொள்வதற்கு பங்களிப்புச் செய்தது. எமது ஆளுகை நடத்தையில் ஒரு வலுவான அடித்தளமாக இருக்கின்ற இந்து மற்றும் பௌத்த மதங்களின் பண்டைய தத்துவங்களின் மூலம் இரு நாடுகளும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வெளியுறவுகளில் இலங்கைக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம் கிடைத்தது. புராண இதிகாசங்களிலிருந்து தொடங்கி, மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே, மௌரிய சாம்ராஜ்யத்தின் பேரரசர் அசோக்க, புத்தரின் சமாதானச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காக தனது குடும்பத்தை மதத் தூதுவர்களாக இலங்கைக்கு அனுப்புவதற்கு தனிப்பட்ட அக்கறையை கொண்டிருந்தார். காலப்போக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு இலங்கையின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் வடிவமைப்பதில் வெளிப்பட்டுள்ளதுடன், நமது நாட்டின் அடையாளத்தை உருவாக்குவதற்கும் பங்களித்தது.

காலனித்துவத்திற்குப் பிந்தைய காலத்தில், எமது பிராந்தியத்தில் பண்டைய விழுமியங்களையும் ஞானத்தையும் மீட்டெடுக்கும் சகாப்தத்தை ஒன்றாகக் கொண்டு வந்த மகாத்மா காந்தி, ஸ்ரீ ஜவஹர்லால் நேரு போன்ற சிறந்த தலைவர்களும், ரவீந்திரநாத் தாகூரின் திறனுள்ள கலாச்சார சின்னங்களும் எமது நாடுகளை வடிவமைத்தன. 1948 ஆம் ஆண்டில் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிப்பதன் மூலம் எமது இரு நாடுகளும் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்ட புதிய சுயாதீன நாடுகளாக வலுவான இருதரப்புப் பங்காளித்துவத்தை உருவாக்கின. அப்போதிருந்து எமது உறவுகள் மேலும் பல மடங்குகளில், ஜனநாயகம் மற்றும் சுதந்திரக் கொள்கைகளால் பிணைக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

எமது உறவுகள் புதுப்பிக்கப்பட்ட பரஸ்பர மரியாதை மற்றும் மக்களுக்கான செழிப்புக்கான கடமைகள் மீள்வரையறை செய்யப்பட்டுள்ள நேரத்தில், 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் மிகுந்த அபிலாஷையுடன் உள் நுழைகின்றோம். 2019 நவம்பர் மாதத்தில் இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் அவர்களே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்து, மரியாதை செலுத்திய முதலாவது வெளிநாட்டுப் பிரமுகர் ஆவார்.

உண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றதன் பின்னர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டதுடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏனைய இந்தியத் தலைவர்களுடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல்களையும் நடத்தினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டு அமைச்சர் என்ற வகையில் எனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்வதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்த அதே நேரத்தில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் வாரங்களில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த உயர் மட்ட இருதரப்புப் பரிமாற்றங்கள் எமது பரஸ்பர உறவின் தனித்துவத்தையும் வலிமையையும் குறித்து நிற்கின்றன. ஆசிய எழுச்சியின் சகாப்தத்தில் எதிர்வரும் தசாப்தங்களில் எமது பொருளாதாரங்களை ஒன்றாக முன்னோக்கி நகர்த்துவதற்கு அயல் தேசங்களாகவும், நாடுகளாகவும் நாம் தயாராகவுள்ளோம். பொதுவான செழிப்பை அடைந்து கொள்வதற்குப் பலனளிப்பதற்காக எமக்கு முன்னிலையில் பணிகளையுள்ளடக்கியதொரு விரிவான நிகழ்ச்சி நிரல் உள்ளது.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் உலகளாவிய பொருளாதார நிறுவனமாக உயர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதார வெற்றிகளிலிருந்து மகத்தான பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். 2050ஆம் ஆண்டளவில் இந்தியா இரண்டாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் விமான இணைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, மேம்பட்ட முதலீடுகள், மக்கள் தொடர்புகள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் பன்மடங்கு நடவடிக்கைகளினால்இந்தியாவுடன் ஒரு வலுவான கூட்டாட்சியை உருவாக்குவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இந்த சூழலில், இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக வட மாகாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை உருவாக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் உதவியை நாங்கள் பாராட்டுகின்றோம். சென்னை - யாழ்ப்பாண விமானங்கள் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கப்பட்டுள்ளதுடன், பெங்களூரு, கொச்சின், மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களை இணைக்கும் விமான சேவைகளையும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், தற்போது ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் 14 இந்திய நகரங்களை உள்ளடக்கியிருப்பதுடன், மக்கள் இணைப்பிற்கு மிகவும் உறுதியான வழியில் உதவுகின்றது. இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், கடந்த ஆண்டு 355,000 பேர் வருகை தந்துள்ளனர்.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமான மற்றும் மூலோபாய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. காலி உரையாடல், இலங்கை - இந்தியா பாதுகாப்பு உரையாடல் மற்றும் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்ட வருடாந்த பாதுகாப்பு உரையாடல்கள், இரு நாடுகளும் தமது பாதுகாப்பு விடயங்கள் குறித்து பகிர்ந்து கொள்வதற்கு பயனளிக்கின்றன. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் எழுச்சியை நிவர்த்தி செய்வதில் உளவுத்துறையைப் பகிர்ந்து கொண்ட இந்திய அரசாங்கத்திற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இலங்கையின் புதிய தலைமையின் கீழ், பிராந்தியத்தில் நிலையான அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கி ஒத்துழைப்பு மூலமாக இந்தியாவுடன் ஒத்துழைப்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், 3வது பெரிய ஏற்றுமதி இலக்காகவும், மிகப்பெரிய இறக்குமதி மூலமாகவும் உள்ளது. 2018/19 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் 6.2 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததுடன், இது 2017/18 உடன் ஒப்பிடும்போது 18% க்கும் அதிகமாகும்.

இலங்கையின் முக்கிய அபிவிருத்திப் பங்காளிகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிய கடன்கள், மானியங்கள், கடன் கோடுகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றில் இந்தியா தொடர்ந்தும் வழங்கி வரும் உதவிகளை நாங்கள் பாராட்டுகின்றோம்.

இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டங்களை நாங்கள் பாராட்டுவதுடன், இன்று வரை நாடு முழுவதும் 60,000 வீடுகளில் 47,000 வீடுகள் நிறைவடைந்துள்ளன. இது வெளிநாடுகளில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

இறுதியாக, எனினும் முடிவாக அன்றி, இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான அவரது மகத்தான சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக, மாண்புமிகு தரஞ்சித் சிங் சந்து அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புதிய பொறுப்புக்களை ஏற்க நீங்கள் விரைவில் எமது தேசத்தை விட்டு வெளியேறுவதால், எனது அரசாங்கத்தின் சார்பாகவும், எனது சார்பாகவும், உங்களுக்கு ஒவ்வொரு வெற்றிகளும் கிட்டுவதற்கு விரும்புகின்றேன். மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவிப்பதற்காக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகின்றேன்.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

- இந்தியக் குடியரசின் தலைவர், அதிமேதகு ஸ்ரீ ராம்நாத் கோவிந்த்,

- இந்தியக் குடியரசின் பிரதமர், அதிமேதகு ஸ்ரீநரேந்திர மோடி,

- இந்தியக் குடியரசின் மக்கள்,

ஆகியோரின் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலனோம்புகைக்காகவும்,

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் இந்தியக் குடியரசுக்கு இடையிலான நீடித்த நட்புக்காகவும்

பிரமாணமொன்றை முன்மொழிவதற்காக இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் தயவுசெய்து என்னுடன் ஒன்றிணையுங்கள்.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close